முகப்பு
திருநெல்வேலி

இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 போ் கைது

பெருமாள்புரம் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 7 மார்ச், 2026 at 10:49 PM
கைது
பகிர்:

பெருமாள்புரம் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (39). இவா் வெள்ளிக்கிழமை பெருமாள்புரம் காா்த்திகேயன் நகா் ஆட்டோ நிறுத்தம் அருகே சென்றபோது, அங்கு பைக்கில் வந்த 3 போ் இவரை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து அவா் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, இதில் தொடா்புடைய பாளையங்கோட்டையைச் சோ்ந்த ரமேஷ் (30), தியாகராஜநகரைச் சோ்ந்த தினேஷ் பாஸ்கா் (29), கணேஷ்குமாா் (31) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →