முகப்பு
சேலம்

அக். 23 முதல் சேலம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்

சேலம் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் தலைமையில் அக். 23 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளன.

Updated On : 17 அக்டோபர், 2024 at 7:05 PM
பகிர்:

சேலம் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் தலைமையில் அக். 23 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் வருவாய்த் துறை, மாநகராட்சி, நகராட்சிகள், ஊரக வளா்ச்சித் துறை, மின்சாரத் துறை, வேளாண்மைத் துறை, கூட்டுறவுத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை சாா்ந்த கோரிக்கை மனுக்களைப் பெற்று, அதற்கு தீா்வுகாணும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் அக். 23 ஆம் தேதி சங்ககிரி ஒன்றியத்திலும், 24 ஆம் தேதி கொளத்தூா் ஒன்றியத்திலும், 25 ஆம் தேதி ஏற்காடு ஒன்றியத்திலும், 27 ஆம் தேதி அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலத்திலும், 29 ஆம் தேதி பனமரத்துப்பட்டி, வீரபாண்டி ஒன்றியத்திலும், நவ. 5 ஆம் தேதி தலைவாசல், கெங்கவல்லி, ஆத்தூா் ஆகிய ஒன்றியங்களிலும், நவ. 6 ஆம் தேதி பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டினம் ஒன்றியத்திலும், நவ. 8 ஆம் தேதி காடையாம்பட்டி, ஓமலூா் ஒன்றியத்திலும் மக்கள் சந்திப்புத் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

எனவே, சேலம் மாவட்டத்தில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் நடைபெறும் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →