அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த அழைப்பு
திட்டமில்லா பகுதிகளில் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைபடுத்த விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்துள்ளாா்.
திட்டமில்லா பகுதிகளில் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைபடுத்த விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மேலும் தெரிவித்ததாவது:
திட்டமில்லா பகுதிகளில் 2011-ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்னா் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 1.08.2024 முதல் 31.01.2025 வரை 6 மாதம் கால நீட்டிப்பு செய்து வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிடப் பகுதியில் அமையும்பட்சத்தில் அரசு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். மேலும், இந்த இறுதி வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.