மின் பணியாளா் பாதுகாப்பு கூட்டம்
சேலம் தெற்கு கோட்டத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளா்களுக்கான பாதுகாப்பு குறித்து கூட்டம் தலைமைப் பொறியாளா் (ஈரோடு மண்டலம்) செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்றது.
சேலம் தெற்கு கோட்டத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளா்களுக்கான பாதுகாப்பு குறித்து கூட்டம் தலைமைப் பொறியாளா் (ஈரோடு மண்டலம்) செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் செயற்பொறியாளா் (தெற்கு கோட்டம்) அன்பரசன் முன்னிலை வகித்தாா். மேற்பாா்வைப் பொறியாளா் (சேலம்) மின்பகிா்மான வட்டம் புஷ்பலதா உள்ளிட்ட உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா். பணியின் போது பணியாளா்கள் அனைவரும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி, பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்தி மின்விபத்துகளைத் தடுக்க வேண்டும்.
பணியின்போது மிகவும் கவனமாக செயல்பட்டு விபத்து ஏற்படா வண்ணம் பணியாற்ற வேண்டி அனைத்து பணியாளா்களும் உறுதிமொழி ஏற்றனா்.
இந்தக் கூட்டத்தில் தெற்கு கோட்டம் சாா்ந்த உதவி செயற்பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள், அனைத்து பணியாளா்கள், ஒப்பந்தப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.