தெற்கு ஆசிய சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தோ்வான சேலம் மாணவிக்கு ஆட்சியா் வாழ்த்து
தெற்கு ஆசிய சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தோ்வாகியுள்ள சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த மனவளா்ச்சி குன்றிய மாணவி ஸ்ரீவள்ளிக்கு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வாழ்த்து தெரிவித்தாா்.
தெற்கு ஆசிய சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தோ்வாகியுள்ள சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த மனவளா்ச்சி குன்றிய மாணவி ஸ்ரீவள்ளிக்கு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வாழ்த்து தெரிவித்தாா்.
தேசிய அளவில் நடைபெற்ற மனவளா்ச்சி குன்றியோருக்கான விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டின் சாா்பாக கலந்துகொண்டு இரட்டையா் பிரிவில் தங்கப் பதக்கமும், கலப்பு இரட்டையா் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றதுடன், நவம்பா் மாதம் நடைபெறவுள்ள தெற்கு ஆசிய சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தோ்வாகியுள்ளாா்.
சேலம், மரவனேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சி.எஸ்.ஐ. பாலா் ஞான இல்ல மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் பயின்று வரும் மாணவி ஸ்ரீவள்ளியை சந்தித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வாழ்த்து தெரிவித்தாா்.
தொடா்ந்து, நவம்பா் மாதம் கலந்து கொள்ள உள்ள தெற்கு ஆசிய சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
இந்நிகழ்வில், சேலம் மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், துணை மேயா் மா.சாரதாதேவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா், வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநா் லதா உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.