நாளை விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம்
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 27) நடைபெறவுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 27) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
சேலம் மாவட்ட மாதந்திர விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் 27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக இரண்டாம் தள கூட்ட அறை எண் 215-இல் நடைபெற உள்ளது.
விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேளாண்மை சம்பந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.