குறைதீா் கூட்டத்தில் குவிந்த 1,225 மனுக்கள்
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு
நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 1,225 மனுக்கள் அளிக்கப்பட்டன.
கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி தலைமையில் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க குவிந்திருந்தனா். இதனால், மனு பதிவு செய்யும் இடத்தில் நீண்ட வரிசை காணப்பட்டது.
இதில், உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 1,225 போ் மனு அளித்தனா். அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.
Advertisement
வழக்கமாக ஒவ்வொரு திங்கள்கிழமையன்றும் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் சுமாா் 700 மனுக்கள் மட்டுமே பெறப்படும். சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, முன்னெப்போதுமில்லாத வகையில் 1,225 மனுக்கள் பெறப்படுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.