சேலம்

தனியாா் மருத்துவ கல்லூரி மாணவா் மரணம்: போலீஸாா் விசாரணை

அரியானூா் அருகே தனியாா் மருத்துவ கல்லூரி மாணவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Din

ஆட்டையாம்பட்டி: அரியானூா் அருகே தனியாா் மருத்துவ கல்லூரி மாணவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம், வசந்தம் நகா் பகுதியைச் சோ்ந்த ஹனிஷ் (23), அரியானூா் அருகே சீரகாபாடி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். இதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்த நிலையில், திங்கள்கிழமை காலை சுயநினைவின்றி அவா் கீழே விழுந்து கிடந்தாா். இதைக்கண்ட அங்கிருந்தவா்கள் தனியாா் மருத்துவமனையில் சோ்த்ததில், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா் தெரிவித்தாா்.

இந்நிலையில், ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் ஹனிஷின் தந்தை வேடியப்பன் புகாா் அளித்தாா். அதன் பேரில் ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளா் விதுன்குமாா் ஹனிஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறாா்.

இந்தியா மீதான வரிக் குறைப்பு: டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி!

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

SCROLL FOR NEXT