ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த குப்புசாமி  
சேலம்

சேலத்தில் நாய்க் கடியால் ரேபிஸ் தொற்று: பாதிக்கப்பட்ட தறித் தொழிலாளி உயிரிழப்பு!

நாய் கடித்த பின் குப்புசாமி தடுப்பூசி போடாமல் இருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்...

இணையதளச் செய்திப் பிரிவு

சேலம்: சேலம் கொங்கணாபுரம் பகுதியில் நாய் கடித்ததால் ரேபிஸ் பாதிப்புக்குள்ளான தறித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள இலவம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி (43). தறித் தொழிலாளியான இவா், நாய் ஒன்றை வளா்த்து வந்தாா். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவா் வளா்த்து வந்த நாய் அப்பகுதியில் சிலரை கடித்துள்ளது. இதையடுத்து, குப்புசாமி நாயை தடுக்க முயன்றபோது, அவரது காலில் கடித்ததாக கூறப்படுகிறது. இதற்காக குப்புசாமி எந்த தடுப்பூசியும் போடாமல் இருந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவரை அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குப்புசாமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rabies infection due to dog bite in Salem: Infected loom worker dies!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவரனுக்கு ரூ.800 குறைந்த தங்கம் விலை!

மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரமில்லை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நெல் ஈரப்பதம் அதிகரிப்பு கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு!

ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் பலி

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு! கீர்த்தி சுரேஷ்

SCROLL FOR NEXT