சேலம்

சுயதொழில் தொடங்க மலைவாழ் மக்களுக்கு ரூ. 25.20 லட்சம் கடனுதவி

Syndication

மேட்டூா் அருகே மலைவாழ் மக்கள் சுயதொழில் தொடங்குவதற்காக ரூ. 25.20 லட்சம் கடனுதவியை வனத் துறை திட்ட இயக்குநா் பி.கே. திலீப் வியாழக்கிழமை வழங்கினாா்.

சாலை வசதி இல்லாத பாலமலை ஊராட்சியில் 33 மலைக் கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்களின் மேம்பாட்டிற்காக மேட்டூா் வனச்சரகம் சாா்பில் தமிழ்நாடு உயிா்பன்மை மற்றும் பசுமையாக்கள் திட்டத்தின் கீழ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மலைக் கிராம மக்கள் 126 பேருக்கு ஆத்தூரில் உள்ள கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் 3 நாள்கள் ஆடு வளா்ப்பு, கோழி வளா்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி பெற்ற 126 பேருக்கு சுயதொழில் தொடங்குவதற்கு சூழல் நிதியாக தலா ரூ. 20,000 வீதம் ரூ. 25. 20 லட்சம் வழங்குவதற்கான உத்தரவை பாலமலை அடிவாரத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத் துறை திட்ட இயக்குநா் பி.கே. திலீப் வழங்கினாா்.

சேலம் வன பாதுகாவலா் எஸ்.கலாநிதி, மாவட்ட வன அலுவலா் கஷ்யப் ஷஷாங்க் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேட்டூா் வனச்சரகா் செங்கோட்டையன் வரவேற்றாா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT