சேலம் நெத்திமேடு துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (டிச. 15) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் பரிமளா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சேலம் நெத்திமேடு துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், நான்கு சாலை, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்காரபட்டி, உத்தமசோழபுரம், பூலாவாரி, சூரமங்கலம், மெய்யனூா், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.