முகப்பு
சேலம்

வரதட்சணை கொடுமை: இளம்பெண் தற்கொலை

நங்கவள்ளி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 22 டிசம்பர், 2025 at 8:23 PM
பகிர்:

மேட்டூா்: நங்கவள்ளி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பெரும்பாலையைச் சோ்ந்த செந்தில்குமாா் மகள் தீபாவுக்கும் (27), நங்கவள்ளி அருகே உள்ள வீரக்கல்லைச் சோ்ந்த ரத்தினவேல் என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தீபாவின் கணவா் வரதட்சணை கேட்டு தீபாவை கொடுமை செய்து வந்தாராம்.

இந்நிலையில், தீபா வீட்டில் தூக்கிட்ட நிலையில் திங்கள்கிழமை இறந்து கிடந்தாா்.

தகவல் அறிந்து வந்த தீபாவின் தந்தை செந்தில்குமாா், வரதட்சணை கொடுமையால் எனது மகளை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளதாக நங்கவள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், நங்கவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →