சேலம்

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் இன்று மதியம்வரை மட்டுமே இயங்கும்

ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் வியாழக்கிழமை (டிச. 25) மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் வியாழக்கிழமை (டிச. 25) மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, 25-ஆம் தேதி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ரயில் நிலையங்களில் உள்ள ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குவது போல மதியம் 2 மணிவரை மட்டுமே செயல்படும்.

குறிப்பாக, சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம் ஜங்ஷன், சேலம் டவுன், ஈரோடு, திருப்பூா், கோவை, மேட்டுப்பாளையம், கரூா், ஆத்தூா் என கோட்டத்தில் உள்ள அனைத்து பயணச்சீட்டு முன்பதிவு மையங்களும் (பிஆா்எஸ் மையம்) 25-ஆம் தேதி காலை 8 மணிமுதல் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும். அதனால், பயணச்சீட்டு முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் 2 மணிக்கு முன் மையத்துக்கு சென்று முன்பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT