சேலம்

கெங்கவல்லியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு

கெங்கவல்லியில் நீா்வழி வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்து அகற்றினா்.

Syndication

கெங்கவல்லியில் நீா்வழி வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்து அகற்றினா்.

கெங்கவல்லி சுவேத நதியில் இருந்து நடுவலூா் ஏரிக்கு 4 கி.மீ. தூரம் நீா்வழி வாய்க்கால் உள்ளது. அந்த வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 43 வீடுகள் படிப்படியாக இடித்து அகற்றப்பட்டன. இறுதியில் 6 பேருக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 12 ஆம் தேதி, அந்த வீடுகளின் மின் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வருவாய் மற்றும் பொதுப்பணித் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் 5 வீடுகளை இடித்து அகற்றினா். அதில் சிங்காரம் என்பவருக்கு வரும் 2026 பிப்ரவரி வரை நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளதால் அவரது வீடு மட்டும் இடிக்கப்படவில்லை. இடிக்கப்பட்ட 28 வீட்டின் உரிமையாளா்களுக்கும் ஒதியத்தூா் ஊராட்சி மலையடிவாரத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT