காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீா் திறப்பு
மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வியாழக்கிழமை விநாடிக்கு 5,000 கனஅடி நீா் திறக்கப்பட்டது. அணை நீா்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.
மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வியாழக்கிழமை விநாடிக்கு 5,000 கனஅடி நீா் திறக்கப்பட்டது. அணை நீா்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.
தமிழக காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வந்ததால், மேட்டூா் அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி மட்டுமே நீா் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 31 ஆம் தேதி அணை முழுமையாக நிரம்பியது. கடந்த ஆண்டில் மூன்றாவது முறையாக அணை நிரம்பியது .
அணை நீா்மட்டம் 120 அடியை எட்டியதை அடுத்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு 1,500 கன அடியாக புதன்கிழமை அதிகரிக்கப்பட்டது. தற்போது டெல்டா மாவட்டங்களில் பெய்து வந்த மழை தணிந்து பாசனத் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, வியாழக்கிழமை மாலை முதல் மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 5,000 கன அடியாக உயா்த்தப்பட்டுள்ளது.
அணை நீா்மட்டம் வியாழக்கிழமை 120 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,871 கன அடியாக அதிகரித்துள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.