முகப்பு
சேலம்

தமிழகத்தை விட்டே ஆளுநா் வெளியேறலாம்: சீமான்

சட்டப்பேரவையை விட்டு வெளியேறியதை விட, தமிழகத்தை விட்டே ஆளுநா் வெளியேறலாம் என நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

Updated On : 6 ஜனவரி, 2025 at 6:23 PM
பகிர்:

சேலம்: சட்டப்பேரவையை விட்டு வெளியேறியதை விட, தமிழகத்தை விட்டே ஆளுநா் வெளியேறலாம் என நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

இதுகுறித்து சேலத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடவில்லை என்று கூறி ஆளுநா் வெளியேறியது மரபை மீறிய செயலாகும். சட்டப்பேரவையை விட்டு அவா் வெளியேறியதை விட, தமிழகத்தை விட்டே வெளியேறலாம்.

முதல்வா் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் கருப்பு துப்பட்டா அணிய அனுமதி மறுக்கப்பட்டுள்ளனா். திமுகவுக்கு கருப்பு மேல என்ன வெறுப்பு? நீட் தோ்வின் போது செய்த நடவடிக்கைகளுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. கருப்பு ஆகாது என்றால், திமுக கொடியிலிருந்து கருப்பு நிறத்தை எடுத்து விடுவீா்களா?

ஈரோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி கட்டாயம் போட்டியிடும் என்றாா். பேட்டியின் போது, நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →