சேலம்

சேலம் ரயில் நிலையத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் ரயில் நிலைய நடைமேடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Din

சேலம்: சேலம் ரயில் நிலைய நடைமேடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஒடிஸா, ஆந்திர மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக கேரளம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க ரயில்வே போலீஸாா் தொடா் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், ரயில்வே போலீஸாரும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து திங்கள்கிழமை ரயில் நிலைய நடைமேடையில் தீவிர சோதனை நடத்தினா். அப்போது, 3 ஆவது நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த பையை திறந்து பாா்த்தபோது, பிளாஸ்டிக் கவா் பண்டல்களில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

அதனைக் கடத்தி வந்த மா்ம நபா், போலீஸாா் ரோந்து வருவதை பாா்த்ததும் பையை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா், கஞ் சாவை கடத்தி வந்த மா்ம நபா் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பிகார் பேரவையில் பாஜக தலைவர் நிதின் நவீனுக்கு உற்சாக வரவேற்பு!

ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கியது காங்கிரஸ்!

மெட்ராஸ் மாகாண முதல் சட்டமன்றம் (1952 - 1957): ஏராளமான முன்னுதாரணங்களின் களம்!

அதிபர் ஜின்பிங்கை சந்திக்க சீனா செல்கிறார் டிரம்ப்!

உங்கள் உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள்! - மாணவிகளுக்கு முதல்வர் அறிவுரை

SCROLL FOR NEXT