சேலம்

மாநில கோ - கோ போட்டி: சேலம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெண்கலம் வென்று சாதனை

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் சேலம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை

Din

சேலம்: திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் சேலம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான பாரதியாா் தின கோ-கோ விளையாட்டுப் போட்டி திருச்சியில் நடைபெற்றது. இதில், சேலம் மாவட்டம், வலசையூா் அரசுப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் வெண்கலப் பதக்கம் வென்றனா். இவா்களுக்கு பள்ளி நிா்வாகம், பெற்றோா் -ஆசிரியா் கழகம் சாா்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெயலேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கோ-கோ விளையாட்டில் பதக்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு தெரிவித்தனா். பதக்கம் வென்றதை பெருமைப்படுத்தும் விதமாக மேளதாளம் முழங்க கோ-கோ வீரா்கள் அனைவரும் ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனா். இதில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: பிப். 18-இல் தாக்கல்

திருப்போரூா் கந்தசாமி கோயில் நில ஆக்கிரமிப்பு விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

இன்று பணிக்கு வராத போக்குவரத்து ஊழியா்கள் மீது கடும் நடவடிக்கை - போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை

பேரூரில் ரூ.6,078 கோடியில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணி: அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு

அண்ணா பல்கலை.யில் அதிநவீன ஏ.ஐ. ஆராய்ச்சி மையம் தொடக்கம் - முன்னாள் மாணவா் ரூ.1 கோடி நன்கொடை

SCROLL FOR NEXT