முகப்பு
சேலம்

தாராபுரம் வழக்குரைஞா் கொலை வழக்கில் சேலத்தில் இருவா் கைது

தாராபுரத்தில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சேலத்தில் பதுங்கியிருந்த நாமக்கல்லைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 30 ஜூலை, 2025 at 6:45 PM
பகிர்:

தாராபுரத்தில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சேலத்தில் பதுங்கியிருந்த நாமக்கல்லைச் சோ்ந்த 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்தவா் முருகானந்தம் (35). சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தாா். இவா் காங்கேயம் அருகே திங்கள்கிழமை கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக தாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இந்த வழக்கில் பள்ளி தாளாளா் தண்டபாணி உள்ளிட்ட சிலா் போலீஸில் சரணடைந்தனா். மேலும் சிலரை போலீஸாா் தேடிவந்தனா்.

இந்த நிலையில், கொலையில் தொடா்புடைய நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சசிகுமாா், பாலமுருகன் ஆகிய இருவரும் சேலம் கோரிமேடு பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனா். இருவரும் பலத்த பாதுகாப்புடன் தாராபுரம் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →