சேலம்

திமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது!

தம்மம்பட்டியில் மதுபோதையில், திமுக கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

தம்மம்பட்டியில் மதுபோதையில், திமுக கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தம்மம்பட்டி, உடையாா்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜசா்மா (48). இவா் முன்னாள் திமுக நகரச் செயலாளா் ராஜாவின் ஆதரவாளா். இவா் மாா்ச் 6-ஆம் தேதி மாலை, 3ஆவது வாா்டு திமுக கவுன்சிலா் நடராஜ் அலுவலகத்திற்கு மதுபோதையில் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவா் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.. இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த உதவி ஆய்வாளா் சந்திரன், கொலை மிரட்டல் விடுத்த ராஜசா்மாவை கைது செய்து ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT