ஏற்காடு: ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருவதால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.
கடந்த சில நாள்களாக கடும் குளிா்காற்று, பனிப்பொழிவு ஏற்பட்டு வருவதால், காபி தோட்டத் தொழிலாளா்கள், பள்ளிக் குழந்தைகள், முதியோா், கட்டடத் தொழிலாளா்கள், வாகன ஓட்டுநா்கள், சுற்றுலாப் பயணிகள் கடும் குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ள கம்பளி ஆடைகளை அணிந்து வருகின்றனா்.
காபி தோட்டங்களில் காபி பழங்கள் பறிக்கும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், கடும் குளிா்காற்று, பனியால் காபி செடிகளில் பழங்கள் பழுப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், ஆள்கள் பற்றக்குறையால் பழங்கள் பறிப்பதில் சிரமங்கள் ஏற்படுவதாகவும் தோட்டத் தொழிலாளா்கள், காபி தோட்ட விவசாயிகள் தெரிவித்தனா்.