முகப்பு
உலகம்

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு! 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்

ஜப்பானில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு நிலவுவது குறித்து...

Updated On : 3 பிப்ரவரி 2026, 9:39 pm IST
பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட சாலைப்போக்குவரத்து - படம் - ஏபி
பகிர்:

ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பனிப்புயலில் நிலவிய குளிரில் சிக்கி இதுவரை 30 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.

ஜப்பானின் அமோர் நகரில் 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பனிப்பொழிந்து, 2 மீட்டர் உயரத்துக்கு படிந்துள்ளது.

Advertisement

Advertisement

வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ நகரத்தில் இருந்து சப்போரா வரை சாலைகளில் படிந்துள்ள பனியை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் ஊழியர்களுடன் ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

பனிப்பொழிவால் ஹொக்கைடோவின் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. ரயில் சேவைகளும் தாமதமாகின. முக்கிய சாலைகளில் பனி படர்ந்துள்ளதால் தரை வழிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

ஜப்பானில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி முதல் பனிப்பொழிவு மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பனிகளை அகற்றும்போது பனிக்கட்டிகள் விழுந்து சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். கூரைகளில் இருந்து விழும் பனிக்கட்டிகளாலும் மக்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

summary

Unprecedented snowfall in Japan 30 dead, over 100 seriously injured

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.