முகப்பு
சேலம்

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா இளைஞா் கைது

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 20 நவம்பர், 2025 at 7:39 PM
பகிர்:

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா இளைஞரை புதன்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் கோவை செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் புதன்கிழமை இரவு பள்ளப்பட்டி போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கோவை செல்லும் பேருந்தில் கைப்பையுடன் ஏறமுயன்ற ஒடிசா மாநில இளைஞரை பிடித்து விசாரித்தனா். அப்போது, அவா் வைத்திருந்த பையில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அவா் ஒடிசா மாநிலம், பம்பாரா மாவட்டத்தைச் சோ்ந்த பா்ப்புலால் குமாா் (48) என்பதும், கோவைக்கு கஞ்சா கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைதுசெய்த போலீஸாா், அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →