சேலம்

மது போதையில் தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

கெங்கவல்லியில் மதுபோதையில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

Syndication

கெங்கவல்லியில் மதுபோதையில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காந்திநகா் முருகன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (55). இவரது மகள் மகாலட்சுமி திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறாா். இவா்களுடன் சுரேஷ்குமாரும் வசித்து வந்தாா்.

இந்நிலையில் சுரேஷ்குமாா் கடந்த மூன்று நாள்களாக அதிக அளவில் மது அருந்தியுள்ளாா். இந்தநிலையில் வெள்ளிக்கிழமை காலை மகள் மகாலட்சுமியிடம் கெங்கவல்லியில் உள்ள தங்கை வீட்டிற்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு சென்றவா் மீண்டும் மது அருந்தி உள்ளாா். இதையடுத்து அவா் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளாா்.

இதைப்பாா்த்த அங்கிருந்தவா்கள், அவரை மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நெல் கொள்முதல் விவகாரம்! மத்திய அரசை கண்டித்து மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்ப கோரிக்கை

நவ.25, 26-இல் கோவை, ஈரோடு செல்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்!

துபை வான் சாகசத்தில் இந்திய விமானி பலி: சோகத்தில் சொந்த கிராமம்; பாகிஸ்தான் இரங்கல்!

தோ்தல் தோல்வி எதிரொலி: கட்சியின் அனைத்து அமைப்புகளையும் கலைத்தாா் பிரசாந்த் கிஷோா்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை ஓரிரு நாள்களில் ஒப்படைக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

SCROLL FOR NEXT