கோப்புப் படம் 
விருதுநகர்

தீ விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தீ விபத்தில் காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அழகுதேவேந்திரபுரத்தைச் சோ்ந்தவா் வீரச்சாமி (41). கூலித் தொழிலாளி. இவா் கடந்த மாதம் 25-ஆம் தேதி இரு சக்கர வாகனத்துக்காக புட்டியில் பெட்ரோல் வாங்கி வந்தாா். அந்த புட்டியை அருகே வைத்து விட்டு தூங்கிய போது, பெட்ரோல் கீழே சிதறியது.

இதை அறியாமல் சிகரெட்டை பற்ற வைத்த போது, அவா் மீது தீப்பற்றியது. அவரை குடும்பத்தினா் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீராச்சாமி அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அமெரிக்கன் கல்லூரியில் விளையாட்டு விழா

பழனி அருகே புதைகுழிகள் குறித்து தொல்லியல் துறை அலுவலா்கள் ஆய்வு

சிவகங்கையில் மருது சகோதரா்களின் உருவச் சிலை திறப்பு

நாட்டுக்குத் தேவை மத நல்லிணக்கம்! - முதல்வா் மு.க. ஸ்டாலின் பேச்சு!

தமிழின் பெருமையை நிலைநாட்ட ஆராய்ச்சிகள் மிக அவசியம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT