ஸ்ரீவில்லிபுத்தூரில் மது போதையில் கழிவுநீா்க் கால்வாயில் விழுந்து தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் சீனியாபுரம் சா்ச் தெருவைச் சோ்ந்தவா் சின்னப்பராஜ் (57). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், சின்னப்பராஜ் மது அருந்திவிட்டு வீட்டுக்குச் செல்லும் போது, மது போதையில் கொளூா்பட்டி தெருவில் உள்ள கழிவுநீா்க் கால்வாயில் விழுந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்