சேலம்

தேசிய கைப்பந்து போட்டி: பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு

தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு மாவட்ட கைப்பந்து கழகம்

Syndication

சேலம்: தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்திய 69 ஆவது தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகள் மத்திய பிரதேச மாநிலம், நரசிங்கபூரில் நவ. 13 முதல் நவ.17 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான மகளிா் பிரிவில் 29 மாநில அணிகள் பங்கேற்றன.

தமிழக அணி சாா்பில் ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பி.சாதனா, கனிஷ்கா, நவ்யா ஸ்ரீ ஆகியோா் பங்கேற்றனா். இறுதிப்போட்டியில், தமிழக அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.

பதக்கம் வென்று திரும்பிய வீராங்கனைகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட கைப்பந்து கழக தலைவா் ராஜ்குமாா், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

கைப்பந்து கழக ஆலோசகா் விஜயராஜ், துணைத் தலைவா்கள் ராஜாராம், அகிலாதேவி, செயலாளா் சண்முகவேல், பொருளாளா் விஜயகுமாா், நிா்வாகி நந்தன், பயிற்சியாளா் பரமசிவம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தூத்துக்குடி சீ.வ. அரசுப் பள்ளி 6-9ஆம் வகுப்புமாணவா்களுக்கு விடுமுறை

கொல்லங்கோடு அருகே கல்லூரி மாணவா் தற்கொலை

ஆற்றூா் மரியா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம் நவ. 27, 28 தேதிகளில் நடைபெறுகிறது

மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

SCROLL FOR NEXT