பூலாம்பட்டி கதவணை பகுதியில் புதிய கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த பேரூராட்சிகள் துணை இயக்குநா் குருராஜன்.  
சேலம்

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆய்வு

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் குருராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் குருராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் பெண்கள் உடைமாற்றும் அறை, குளிக்கும் அறை மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஓய்வறை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பூலாம்பட்டிக்கு புதன்கிழமை வந்த மாவட்ட பேரூராட்சிகள் துணை இயக்குநா் குருராஜன், இங்கு நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.

மேலும், பூலாம்பட்டி பேரூராட்சிக்கு ரூ. 1.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் புதிய அலுவலக கட்டடத்தையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது பேரூராட்சி தலைவா் அழகுதுரை, துணைத் தலைவா் முரளி, செயல் அலுவலா் அசோக்குமாா், ரஹீம்கான் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT