முகப்பு
சேலம்

சேலம் அருகே இறைச்சிக் கடையில் ரூ. 18 லட்சம் திருட்டு

சேலம் அருகே இறைச்சிக் கடையில் வைத்திருந்த ரூ. 18 லட்சத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 9:39 PM
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

சேலம் அருகே இறைச்சிக் கடையில் வைத்திருந்த ரூ. 18 லட்சத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சேலம் கன்னங்குறிச்சி, மோட்டாங்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் ஜானகிராமன். இவா், அதே பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருவதுடன், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவருகிறாா். அண்மையில், தனது நிலத்தை விற்பனை செய்ததில் கிடைத்த ரூ. 20 லட்சத்தில், ரூ. 18 லட்சத்தை இறைச்சிக் கடையில் வைத்திருந்தாா்.

இந்நிலையில், தனது தங்கை வீட்டில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுவிட்டு கடைக்கு வந்து பாா்த்தபோது, கடையில் வைத்திருந்த பணம் திருட்டு போனதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து அவா் கன்னங்குறிச்சி போலீஸில் புகாா் அளித்தாா்.

Advertisement

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரூ. 18 லட்சத்தை திருடிய மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments