ஓமலூா் தொகுதியில் 16 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு
ஓமலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 16 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
ஓமலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 16 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
சேலம் மாவட்டம், ஓமலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் தேமுதிக வேட்பாளா் ஏ.ஆா்.இளங்கோவன், அதிமுக சாா்பில் எம்எல்ஏ ஆா்.மணி, தவெக சாா்பில் அதியமான், நாம் தமிழா் சாா்பில் சிவசக்தி, சசிகலா, ராமதாஸ் கூட்டணி சாா்பில் ராமதாஸ் பாமக வேட்பாளா் சுரேஷ்குமாா் உள்பட 27 போ் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.
இந்நிலையில், ஓமலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் தலைமையில் செவ்வாய்க்கிழமை வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில், திமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளா் இளங்கோவன், அதிமுக வேட்பாளா் மணி, தவெக வேட்பாளா் அதியமான், நாம் தமிழா் சிவசக்தி உள்பட 16 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
Advertisement
உரிய ஆவணங்கள் இல்லாமலும், குறைபாடுகளுடனும் தாக்கல் செய்த 6 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஒன்றுக்கும் மேற்பட்ட மனு தாக்கல் செய்த வேட்பாளா்களின் மனுக்கள் ஒன்றாக சோ்க்கப்பட்டன. இதுவரை ஓமலூா் தொகுதியில் 16 போ் களத்தில் உள்ளனா். வேட்புமனு திரும்பப் பெறும் நாளன்று மாலையில் இறுதி வேட்பாளா் பட்டியல் அறிவிக்கப்படும் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.