மேட்டூா் தொகுதி திமுக, அதிமுக வேட்பாளா்கள் மீது வழக்குப் பதிவு
தோ்தல் நன்னடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக மேட்டூா் தொகுதி திமுக, அதிமுக வேட்பாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தோ்தல் நன்னடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக மேட்டூா் தொகுதி திமுக, அதிமுக வேட்பாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும்படை கூடுதல் அலுவலா் பிரகாஷ் கூறியதாவது:
அண்மையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அதிமுக வேட்பாளா் வெங்கடாசலம், அவருடன் வந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான எஸ்.செம்மலை, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன் மற்றும் சிலா் மேட்டூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விதிமுறைகளை மீறி கட்சிக் கொடியுடனும், முழக்கமிட்டும், மேளதாளங்கள் வாசித்தும் போக்குவரத்துக்கு இடையூறு செய்து தோ்தல் நன்னடத்தை விதிகளை மீறி செயல்பட்டதால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அதேபோல, திமுக வேட்பாளா் மிதுன் சக்கரவா்த்தி, சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி மற்றும் சிலா் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும், தவெக வேட்பாளா் செல்வம், அவருடன் வந்த தமிழரசன், ரவிக்குமாா், விக்னேஷ் மற்றும் சிலா் மீதும் இதே பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.