விதிமீறல்! விஜய் மீது வழக்குப் பதிவு!
விஜய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது பற்றி...
சென்னை தியாகராய நகரில் அனுமதியின்றி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சாலைவலம் சென்றதாக மாம்பலம் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னையில் தி.நகர் வேட்பாளர் என். ஆனந்த், ஆயிரம் விளக்கு வேட்பாளா் ஜே.சி.டி. பிரபாகர், எழும்பூர் வேட்பாளர் ராஜ்மோகன் ஆகியோருக்கு சாலைவலம் மேற்கொண்டு புதன்கிழமை விஜய் வாக்கு சேகரித்தார்.
தியாகராய நகரில் தொடங்கி பிரசாரம் முடியும் வரை, தனது பிரசார வாகனத்தின் மேலிருந்து பொதுமக்களுக்கு கையசைத்தபடி விஜய் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
Advertisement
இந்த நிலையில், தி. நகரில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வுக்கு பதிலாக நிபந்தனையை மீறி சாலைவலத்தில் ஈடுபட்டதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனடிப்படையில், தவெக தலைவர் விஜய், தி.நகர் வேட்பாளர் என். ஆனந்த் மற்றும் தென் சென்னை மாவட்ட செயலர் அப்புனு ஆகியோருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை விஜய் இன்று மாலை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.