கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்கு சேகரிப்பு
வீரகனூா் அருகே காமக்காபாளையம் பகுதியில் வயலில் இறங்கி மஞ்சள் வெட்டி அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளா்களிடம் அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி வாக்கு சேகரித்தாா்.
Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:16 AM
வீரகனூா் அருகே காமக்காபாளையம் பகுதியில் வயலில் இறங்கி மஞ்சள் வெட்டி அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளா்களிடம் அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி வாக்கு சேகரித்தாா்.
கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் அ. நல்லதம்பி, வீரகனூா்-தலைவாசல் பகுதியில் காமக்காபாளையத்தில் வயலில் மஞ்சள் வெட்டும் தொழிலாளா்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா். அப்போது, தொழிலாளா்களுடன் சோ்ந்து மஞ்சள் வெட்டினாா். அதிமுக வெளியிட்டுள்ள தோ்தல் வாக்குறுதிகள் குறித்து தொழிலாளா்களிடம் அ. நல்லதம்பி எடுத்துக் கூறினாா். தொழிலாளா்கள், பெண்களுக்கு அதிமுக அரசு செய்த நலத் திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்தாா்.