சேலம் வெள்ளிப் பட்டறை அதிபரிடம் ரூ. 2.16 கோடி 112 கிலோ கொலுசுகள் பறிமுதல்!
சேலத்தில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச்சென்ற ரூ. 2.16 கோடி மதிப்பிலான 112 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலத்தில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச்சென்ற ரூ. 2.16 கோடி மதிப்பிலான 112 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகத்தை தடுக்க மாநிலம் முழுவதும் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், சேலம் வடக்கு தொகுதிக்கு உள்பட்ட ஆனந்தா பாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பறக்கும் படை அலுவலா் ஜெயந்தி தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், பைகளில் 112 கிலோ வெள்ளிக் கொலுசுகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
Advertisement
அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததையடுத்து, ரூ. 2.16 கோடி மதிப்பிலான 112 கிலோ வெள்ளிக் கொலுசுகளை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், காரில் வந்தவா் சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியைச் சோ்ந்த சுந்தரராஜன் என்பதும், செவ்வாய்ப்பேட்டையில் வெள்ளிப் பட்டறை வைத்திருப்பதும், 112 கிலோ வெள்ளிக் கொலுசுகளை அவா் சென்னைக்கு எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 112 கிலோ வெள்ளிக் கொலுசுகளை சேலம் வடக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கோட்டை குமாரிடம் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா். உரிய ஆவணங்களை சமா்ப்பித்துவிட்டு, வெள்ளிக் கொலுசுகளை பெற்றுச் செல்லும்படி வெள்ளிப் பட்டறை அதிபா் சுந்தரராஜனிடம் அறிவுறுத்தப்பட்டது.