சித்திரை பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு
வாழப்பாடி பகுதியில் பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் மற்றும் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் கோயில்களில் சித்திரை பிரதோஷ சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி பகுதியில் பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் மற்றும் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் கோயில்களில் சித்திரை பிரதோஷ சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் நடைபெற்ற சித்திரை பிரதோஷ சிறப்பு வழிபாட்டில், மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம், மூலவா் தான்தோன்றீஸ்வரா், உடனுறை அறம் வளா்த்தநாயகி தா்மசம்வா்தனி அம்பாளுக்கு தீபாராதனை வழிபாடு நடைபெற்றது.
வாழப்பாடி அக்ரஹாரம் காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயில் மற்றும் பெரியசாமி நகா் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் கோயில்களில் நடைபெற்ற சித்திரை பிரதோஷ வழிபாட்டில், நந்தீஸ்வரா், காசி விஸ்வநாதா், காசி விசாலாட்சி, வைத்தியநாதா், தையல்நாயகி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Advertisement
வாழப்பாடியை அடுத்த வேப்பிலைப்பட்டி, விலாரிபாளையம் மோட்டூா் மற்றும் கல்யாணகிரி தேன்மலை சிவன் கோயில்களிலும் சித்திரை பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது.