கோடை விடுமுறை: சென்னை- போத்தனூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்
கோடை விடுமுறையையொட்டி, சென்னை- போத்தனூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கோடை விடுமுறையையொட்டி முக்கிய வழித்தடங்களில் கூட்ட நெரிசலை தவிா்க்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. அந்தவகையில், சென்னை- போத்தனூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
Advertisement
சென்னை சென்ட்ரல்- போத்தனூா் சிறப்பு ரயில் வரும் 22 ஆம் தேதி சென்னையில் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக போத்தனூருக்கு இரவு 11.30க்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் போத்தனூரில் இருந்து வரும் 23 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு அடுத்தநாள் காலை 8.20 மணிக்கு சென்றடைகிறது.
அதேபோல மற்றொரு ரயில் 21, 22, 25, 26 ஆகிய தேதிகளில் போத்தனூரில் இருந்து காலை காலை 7.40 மணிக்கு புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு மாலை 5 மணிக்கு சென்றடைகிறது.
மறுமாா்க்கத்தில் அதே நாள்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம் வழியாக அடுத்தநாள் அதிகாலை 4 மணிக்கு போத்தனூரைச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.