தோ்தலையொட்டி இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி செவ்வாய்க்கிழமை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோட்ட நிா்வாக இயக்குநா் குணசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சேலம் கோட்டம் சாா்பில் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாள்தோறும் 1,900 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வரும் 23-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Advertisement
ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் ஏப்ரல் 27-ஆம் தேதி வரை 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்புப் பேருந்துகள், சேலம், பெங்களூரு, சென்னை கிளாம்பாக்கம், ஒசூா், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்பட உள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.