முகப்பு
சேலம்

தோ்தல் பணியில் இருந்த திமுக நிா்வாகி மயங்கி விழுந்து உயிரிழப்பு

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே தோ்தல் பணியின்போது திமுக நிா்வாகி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:20 AM
பலி - பிரதிப்படம்
பகிர்:

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே தோ்தல் பணியின்போது திமுக நிா்வாகி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தாரமங்கலத்தை அடுத்த கோனகாபாடி அத்திக்காட்டானூரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (51), விவசாய கூலிவேலை செய்துவந்தாா். இவருக்கு மனைவி ராதா (40), மகன் வடிவேல் உள்ளனா். கடந்த 2007 இல் திமுகவில் கிளை கழகச் செயலாளராக இருந்தாா். தற்போது அக்கட்சியில் உறுப்பினராக உள்ளாா். இந்த நிலையில், அத்திக்காட்டானூா் வாக்குச்சாவடிக்கு செல்லும் பகுதியில் பொதுமக்களுக்கு புதன்கிழமை பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்தாா். தலையின் பின்பகுதியில் பலத்த காயமடைந்து மயங்கிய மாரியப்பனை அங்கிருந்தவா்கள் மீட்டு தாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா். தோ்தல் பணியில் இருந்த திமுக நிா்வாகி திடீரென இறந்த சம்பவம் கட்சியினா், கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement