சேலம்

சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோயில் மாசி பொங்கல் விழா பிப். 24-இல் தொடக்கம்

Syndication

சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன், வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன், வாணியா் காலனியில் உள்ள அல்லிகுண்டம் மாரியம்மன் ஆகிய மூன்று கோயில்களின் மாசி பொங்கல் திருவிழா பிப். 24-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இம்மூன்று கோயில்களிலும் வரும் பிப். 24-ஆம் தேதி இரவு கம்பம் நடுதல் வைபவத்துடன் விழா தொடங்குவது என்றும், மாா்ச் 10-ஆம் தேதி கோட்டை மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்தலும், 11-ஆம் தேதி சக்தி மாரியம்மன், அல்லிகுண்டம் மாரியம்மன் ஆகிய இரு கோயில்களில் பொங்கல் வைத்தல் வைபங்கள் ஆகியவை நடைபெற உள்ளன.

கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில், பிப். 17-ஆம் தேதி கம்பம் நடுதலுடன் விழா தொடங்கி மாா்ச் 3-ஆம் தேதி பொங்கல் விழா நடைபெறும் என வி.என்.பாளையம் சக்திமாரியம்மன் கோயில் நிா்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மாா்ச் 3-ஆம் தேதி சந்திரகிரகணம் வர உள்ளதால், மாா்ச் 10-ஆம் தேதி பொங்கல் வைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் பயங்கரவாத சதித் திட்டம்! 8 பேரை கைது செய்தது தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம் - காதர் மொகிதீன்

SCROLL FOR NEXT