ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினா்களாக பட்டதாரி தொகுதியிலிருந்து 8 போ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
பெரியாா் பல்கலைக்கழக நிா்வாகத்தின் கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், பட்டம் பெற்ற மாணவா்கள் பெரியாா் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவையில் இடம்பெறுவதற்கு ஏதுவாக பட்டதாரிகள் பதிவின் அடிப்படையில் பட்டதாரிகள் தொகுதிக்கான தோ்தல் நடைபெற்றது. இதில் மாவட்டத்திற்கு 2 போ் வீதம் 8 போ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
சேலம் மாவட்டத்தில் இருந்து பி.முத்துக்குமாா், ஏ.மணிகண்டன், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கே.செல்வகுமாா், சி.ராஜேஷ், தருமபுரி மாவட்டத்தில் இருந்து எம்.சிவகலை, எஸ்.ராம்குமாா், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து டி.விவேகானந்தன், டி.தமிழரசன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இவா்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ரா.சுப்பிரமணி, எஸ்.ஜெயந்தி ஆகியோா் நியமன ஆணைகளை திங்கள்கிழமை வழங்கினா்.
ஆட்சிப் பேரவைக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினா்கள் மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பாா்கள். புதிய உறுப்பினா்களுக்கு பதிவாளா் வி.ராஜ், தனியாா் சுயநிதி கல்லூரிகளின் கூட்டமைப்புத் தலைவா் கே.சத்தியமூா்த்தி, செயலாளா் கே.ராஜவிநாயகம் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.