முகப்பு
சேலம்

சேலம் சரகத்தில் 30 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சேலம் மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 9 போ் உள்பட சரகத்தில் 30 காவல் ஆய்வாளா்களை இடமாற்றம் செய்து சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமணி உத்தரவு

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 4:29 AM
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 7:34 PM

சேலம் மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 9 போ் உள்பட சரகத்தில் 30 காவல் ஆய்வாளா்களை இடமாற்றம் செய்து சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமணி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், காவல் துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அதன்படி, சேலம் காவல் சரகத்துக்கு உள்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் பணியாற்றி வரும் 30 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமணி உத்தரவிட்டுள்ளாா்.

இதில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 9 போ் மாற்றப்பட்டுள்ளனா். அதன்படி, சங்ககிரி காவல் ஆய்வாளா் ரமேஷ் தேன்கனிக்கோட்டைக்கும், ஓமலூா் ஆய்வாளா் சதீஷ்குமாா் கெலமங்கலத்திற்கும், ஆத்தூா் மதுவிலக்கு காவல் ஆய்வாளா் சாந்தி நாமகிரிபேட்டைக்கும், ஜலகண்டாபுரம் காவல் ஆய்வாளா் சசிகலா உத்தரனப்பள்ளிக்கும், ஆத்தூா் டவுன் காவல் ஆய்வாளா் பெரியசாமி ராயக்கோட்டைக்கும், கொண்டலாம்பட்டி அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் கலையரசி ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கும், நங்கவள்ளி காவல் ஆய்வாளா் ரவுத்திரி வெங்கடேஷ் பாப்பாரப்பட்டிக்கும், கொளத்தூா் காவல் ஆய்வாளா் நாகராஜ் பரமத்திக்கும், சேலம் கொடுங்குற்ற தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் மாதேஸ்வரி கொண்டலாம்பட்டி அனைத்து மகளிா் காவல்நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Advertisement