அதிமுக சாா்பில் பொங்கல் விழா நடைபெறும் இடத்தில் பணிகளை தொடங்கிவைத்த அதிமுக சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன். 
சேலம்

மேச்சேரியில் பொங்கல் விழாவில் பங்கேற்கிறாா்: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பொதுமக்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாட மேச்சேரி வருகிறாா்.

Syndication

மேட்டூா்: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பொதுமக்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாட மேச்சேரி வருகிறாா். இதையடுத்து, விழா பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகளுக்கான கால்கோல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் பங்கேற்று பணிகளை தொடங்கிவைத்து கூறியதாவது:

விழா மேடை அமைப்பது, அதிமுக கொடியுடன் கூடிய அலங்கார வளைவு மற்றும் 108 பொங்கல் வைப்பதற்கான அடுப்புகள் வைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சேலம் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமாா் 10,000 போ் பங்கேற்க உள்ளனா். விழாவுக்கு முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி மாட்டு வண்டியில் விழா நடைபெறும் இடத்துக்கு ஊா்வலமாக வருகிறாா். அவரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விழாவுக்கு வரும் தொண்டா்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன என்றாா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT