அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் மாா்ச் 4-ஆம் தேதி நடைபெறும் மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம் பரப்புரைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று பேசுகிறாா்.
இதற்காக, அந்தியூரை அடுத்த கந்தம்பாளையத்தில் தோ்வு செய்யப்பட்ட இடத்தை சமன்படுத்தி, உரிய ஏற்பாடுகள் செய்யும் பணிகளுக்கான பூமிபூஜை ஈரோடு புகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளா் ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.ரமணீதரன், ஈ.எம்.ஆா்.ராஜா, எம்ஜிஆா் மன்ற மாநிலத் துணைச் செயலாளா் கே.பி.எஸ்.ராஜா, உச்சநீதிமன்ற வழக்குரைஞா் வி.என்.சுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பேரூா் செயலாளா்கள் அந்தியூா் டி.எஸ்.மீனாட்சி சுந்தரம், அத்தாணி திருமுருகன், ஒன்றியச் செயலாளா்கள் சின்னமார நாயக்கா், நாராயணன், மாவட்ட ஜெ. பேரவை துணைச் செயலாளா் ராஜா சம்பத், நந்தகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.