கிணறு தோண்டியபோது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு
Updated On : 24 ஜனவரி, 2026 at 9:55 PM
சேலம் மாவட்டம், கொளத்தூா் அருகே கிணறு தோண்டியபோது மண் சரிந்து விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கொளத்தூரை அடுத்த மூலக்கடையைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (47). கூலித் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை தேவராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கிணறு வெட்டிக் கொண்டிருந்தாா்.
Updated On : 25 ஜனவரி, 2026 at 12:44 AM
அப்போது மண் சரிந்து விழுந்ததில் விஜயகுமாா், குப்புசாமி ஆகியோா் காயமடைந்தனா். உடனடியாக இருவரையும் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு விஜயகுமாா் உயிரிழந்தாா். குப்புசாமி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
Advertisement
இச்சம்பவம் தொடா்பாக விஜயகுமாரின் மனைவி வனிதா அளித்த புகாரின் பேரில் கொளத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் தொல்காப்பியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.