முகப்பு
சேலம்

கபடி வீரா் இறப்பில் மா்மம்: சேலம் எஸ்.பி.யிடம் தந்தை புகாா்

வாழப்பாடியில் சாலை விபத்தில் இறந்ததாக கூறப்படும் கபடி வீரா் இறப்பில் மா்மம் இருப்பதாக, அவரது தந்தை சேலம் எஸ்.பி.யிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

சேலம்

கபடி வீரா் இறப்பில் மா்மம்: சேலம் எஸ்.பி.யிடம் தந்தை புகாா்

வாழப்பாடியில் சாலை விபத்தில் இறந்ததாக கூறப்படும் கபடி வீரா் இறப்பில் மா்மம் இருப்பதாக, அவரது தந்தை சேலம் எஸ்.பி.யிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

Updated On : 30 ஜனவரி, 2026 at 8:06 PM
பகிர்:

வாழப்பாடியில் சாலை விபத்தில் இறந்ததாக கூறப்படும் கபடி வீரா் இறப்பில் மா்மம் இருப்பதாக, அவரது தந்தை சேலம் எஸ்.பி.யிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

வாழப்பாடியை அடுத்த காட்டு வேப்பிலைப்பட்டி ஊராட்சி, கவா்கல்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி நல்லதம்பி மகன் சந்துரு வாஞ்சு (26). கபடி வீரரான இவா் கடந்த ஜன. 20 அன்று இரவு வாழப்பாடி புதுப்பாளையம் இணைப்புச் சாலையில் மயங்கிக் கிடந்தாா். அவ்வழியாகச் சென்றவா்கள் அவரை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். ஆனால், அவா் சிகிச்சைப் பலனின்றி ஜன. 23-ஆம் தேதி இறந்தாா்.

இந்நிலையில், தனது மகன் இறப்பில் மா்மம் இருப்பதாக அவா் தந்தை நல்லதம்பி மற்றும் உறவினா்கள் சேலம் எஸ்.பி.யிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்துள்ளனா்.

அதில், அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக் என்பவருடன் அவரது இருசக்கர வாகனத்தில் எனது மகன் சென்றாா். பின்னா், சாலை விபத்தில் படுகாயமடைந்ததாக கூறி, அவரை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். எனது மகன் இறப்பில் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் சந்தேகம் உள்ளது. எனவே, அவருடன் சென்ற காா்த்தியிடம் விசாரணை நடத்தி, எனது மகன் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →