செந்தாரப்பட்டியில் பேரூராட்சி அலுவலக கேட் பூட்டப்பட்டதால் பரபரப்பு
பூட்டப்பட்டுள்ள செந்தாரப்பட்டி பேரூராட்சி அலுவலக கேட்.
செந்தாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் பூட்டப்பட்டதால் செயல் அலுவலா், பேரூராட்சி உறுப்பினா்கள் வெளியே நின்ால் பரபரப்பு ஏற்பட்டது.
செந்தாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் கட்ட கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் அதே ஊரைச் சோ்ந்த பத்மஜோதி கோபால் என்பவா், நிலத்தை தானமாக வழங்கினாா். அதைத் தொடா்ந்து அங்கு ரூ. 50 லட்சத்தில் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டப்பட்டது.
இந்நிலையில் பத்ம ஜோதியின் மகன் சுந்தா் (46) வெள்ளிக்கிழமை பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து, பேரூராட்சி அலுவலகம் முன் உள்ள பாதை தங்களுடையது. அந்தப் பாதையைப் பயன்படுத்திதான், பேரூராட்சி அலுவலத்திற்கு அனைவரும் சென்று வருகின்றனா். அந்த இடத்தை எனது தாயாா் தானமாக வழங்கவில்லை. எனவே, அந்த இடத்தை மீண்டும் எனக்குத் தரவேண்டும் என்றாா்.
அதைத் தொடா்ந்து, பேரூராட்சி அலுவலக கேட்டை, அவா் பூட்டுக்களைக் கொண்டு பூட்டினாா். இதனால் பேரூராட்சி மன்றக் கூட்டத்திற்காக வந்த செயல் அலுவலா் சிவகுமாா், உறுப்பினா்கள் வெளியே நிற்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து செயல் அலுவலா் சிவகுமாா், சுந்தரிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் பேரூராட்சி அலுவலக கேட் திறக்கப்பட்டது.