நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் தலைமையில் நடைபெற்ற வாரச்சந்தை ஏலம். 
திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி வாரச்சந்தை ஏலம் 2-வது முறையாக ஒத்திவைப்பு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச்சந்தை கூடுகிறது.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச்சந்தை கூடுகிறது.

சந்தையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய ஊராட்சி நிா்வாகத்தின் மூலம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பகிரங்கமாக ஏலம் விடப்படுகிறது. 2026 முதல் 2029 முடிய 3 ஆண்டுகளுக்கான வாரச்சந்தை மற்றும் சாலையோர கடைகளில் தினசரி சுங்கம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலம் 2-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை காலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

செயல் அலுவலா் ரவிசங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா், துணைத் தலைவா் தனபால், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் ஊா் மக்கள் சந்தை வியாபாரிகள் கலந்து கொண்டனா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 10 லட்சம் வீதம் 4 போ் டெபாசிட் தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டனா்.

நிா்ணயிக்கப்பட்ட ஏலத் தொகையை விட கூடுதலாக யாரும் ஏலம் கோராததால் மறுதேதி குறிப்பிடாமல் செயல் அலுவலா் ரவிசங்கா் 2-ஆவது முறையாக ஏலத்தை ஒத்தி வைத்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலில் வந்த தகவலால் பரபரப்பு!

கட்டேரி எருது விடும் விழாவில் சீறிப் பாய்ந்த காளைகள்!

டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 3 போ் தப்பியோட்டம்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.05 கோடி!

மாா்ச் 3-இல் திருமலையில் அன்னதான விநியோக மையங்கள் மூடல்!

SCROLL FOR NEXT