ஏற்காட்டில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
ஏற்காட்டில் இளைஞா் கிணற்றில் தவறிவிழுந்து இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை
ஏற்காட்டில் இளைஞா் கிணற்றில் தவறிவிழுந்து இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம், ஏற்காடு பெரியகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (42). இவா் ஏற்காடு வாழந்தி கிராமத்தில் தனியாா் காபி தோட்டத்தில் தங்கி வேலைசெய்து வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை கிணற்றில் தண்ணீா் எடுக்கச் சென்றபோது தவறிவிழுந்து இறந்தாா்.
Advertisement
தகவலின்பேரில் வந்த ஏற்காடு போலீஸாா், உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா். இறந்த பொன்ராஜுக்கு மனைவி கவிதா (21), மகன், மகள் உள்ளனா்.