தம்மம்பட்டியில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை
தம்மம்பட்டி சிவன் கோயிலில் தேய்பிறை ப ஞ்சமியையொட்டி வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை
தம்மம்பட்டி: தம்மம்பட்டி சிவன் கோயிலில் தேய்பிறை ப ஞ்சமியையொட்டி வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் வாராஹி அம்மனுக்கு உகந்த தேய்பிறை பஞ்சமி திதியில், சப்த கன்னியா்களில் ஒருவரான வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து பிரம்மி, கௌமாரி, மகேஸ்வரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னியருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.