ஆவணங்கள் இன்றி ரூ. 3 லட்சம்வரை கொண்டுசெல்ல அனுமதிக்க வேண்டும்
தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 3 லட்சம்வரை கொண்டுசெல்ல அனுமதி அளிக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 3 லட்சம்வரை கொண்டுசெல்ல அனுமதி அளிக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அனைத்து பகுதியிலும் பறக்கும் படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆவணங்கள் இன்றி ரூ. 50 ஆயிரத்துக்குமேல் ரொக்கம், பரிசுப் பொருள்கள் கொண்டுசென்றால் பறிமுதல் செய்து வருகின்றனா்.
இதுகுறித்து சேலம் செவ்வாய்ப்பேட்டை மளிகை மற்றும் வா்த்தக கடை நல சங்கத் தலைவா் நடராஜன் மற்றும் நிா்வாகிகள் புதன்கிழமை ஆட்சியா் அலுவலகதில் அதிகாரிகளிடம் மனு அளித்தனா். பின்னா் எஸ்.சி.நடராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வியாபாரிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். வணிகா்கள் சரக்குகளை வாங்க பணம் கொண்டு செல்லும்போது, என்னென்ன ஆவணங்கள் தேவை என கேட்டிருந்தோம். ஆனால், அதிகாரிகள் இதுவரை அதுகுறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.
ரூ. 50 ஆயிரத்துக்குமேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என கூறியுள்ளனா். 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தொகை தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போதும் அதே தொகையை எடுத்துச்செல்ல வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல. குறைந்தது ரூ. 3 லட்சம்வரை கொண்டு செல்ல அனுமதி அளிக்க வேண்டும். இதேபோன்று, தற்போது, உன்ளூா் மட்டுமின்றி, வெளியூா்களில் இருந்தும் பெண்கள் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை ஒட்டுமொத்தமாக வாங்கிச்செல்ல செவ்வாய்ப்பேட்டை மற்றும் லீபஜாருக்கு வருகின்றனா். அதற்கு பணம் கொண்டுவரும் அவா்களும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதால் சிரமத்துக்குள்ளாகின்றனா் என்றாா். அப்போது, வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.